சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு
dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சி
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவான போது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் இந்த அணியை வாங்கினார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் அணியை நிர்வகித்து வருகிறார்.
2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி இந்த அணியில் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக அதிகளவிலான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி, 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 45 வயதாகி விட்ட நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியுள்ளார். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன்வந்தனர். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |