டோனியின் முடிவை பாராட்டும் ரசிகர்கள்! விமர்சனத்திற்கு கொடுத்த பதிலடி
டெல்லி அணிக்கெதிரான போட்டியில், டோனி எடுத்த முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி அணியும் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் ஆடிய சென்னை அணி சற்று முன் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சென்னை அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்டார்.
ஆனால், உத்தப்பாவும் அந்தளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, அவரும் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
டோனி எப்போதுமே சுரேஷ் ரெய்னாவை அணியில் இருந்து எடுக்கமாட்டார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டோனி, உத்தப்பாவை களமிறக்கியது, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.