பிளே ஆப்புக்கு முன்னாடிய காதலை சொல்லிடு! தீபக் சஹாருக்கு ஐடியா கொடுத்த டோனி: சுவாரஸ்ய தகவல்
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளான தீபக் சஹார் காதலை முன்னரே வெளிப்படுத்துவதற்கு காரணமே டோனி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், டோனி தலைமையிலான சென்னை அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்பு, சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் யாரும் எதிர்பார்க்காத வகையில், தன்னுடைய தோழியான ஜெயா பரத்வாஜ் என்ற பெண்ணிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வரை அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது, சாகர் நேற்று காதலை சொல்வதற்கு முக்கியமாக காரணமாக இருந்தது டோனி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தீபக் சஹார் தன்னுடைய காதலை பிளே ஆப் சுற்றின் போது தான் வெளிப்படுத்த இருந்தாராம், ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னரே உன்னுடைய காதலியிடம் ப்ரொபோஸ் செய்துவிடு என்று டோனி அட்வைஸ் கொடுத்த பின்னரே, தீபக் சஹார் உடனடியாக இதை செய்துவிட்டாராம்.
மேலும், இது குறித்து தீபக் சஹாரின் தந்தை கூறுகையில், தீபக் சாஹர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வீடு திரும்பிய உடன் அவர்கள் இருவருக்குமான திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.