4 வருடத்திற்கு பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முக்கிய வீரர்! மீண்டும் வந்த டோனி: உலகக்கோப்பை தொடர் தேர்வு குறித்து முக்கிய தகவல்
இந்திய அணியின் உலகக்கோப்பை அணிக்கான தேர்வில், நான்கு ஆண்டுகளுக்கு பின் முக்கிய வீரர் இடம் பெற்றுள்ளார்.
இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த, உலகக்கோப்பை டி20-க்கான அணி, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார்.
அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம் பெறவில்லை. குறிப்பாக இளம் வீரரான யுவேந்திர சஹால் இந்த உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அஸ்வின் இந்திய அணிக்காக டி20 போட்டிகள் விளையாடி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர் அணியில் சேர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
சமீப தொடர்களில் யுவேந்திர சஹால் பந்து வீச்சு அந்தளவிற்கு இல்லை, அதே சமயம் ரன்களை வாரி வழங்குகிறார். பேட்டிங்கிலும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. அதுவே அஸ்வின் என்றால், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்து வீசக் கூடியவர், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடக் கூடியவர் அதுவே மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். டோனி சம்மததித்துள்ளார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். டோனி சம்மதித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் டோனி இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவார். இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரவி சாஸ்திரி மற்றும் பிற பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து எம்.எஸ்.டோனி செயல்படுவார்