டோனி போட்ட ஒரே கண்டிசன் இது தான்! உலகக்கோப்பை குறித்து பிசிசிஐ செயலாளர் சொன்ன தகவல்
உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், டோனி போட்ட கண்டிசன் குறித்து பிசிசிஐ செயலலாளர் கூறியுள்ளார்.
துபாயில் உலகக்கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் திகதி முதல் துவங்குகிறது. இதில் குரூப் ஸ்டேஜ் ஆட்டம் 17-ஆம் திகதியும், அதன் பின் 26-ஆம் திகதி முதல் சூப்பர் 12 சுற்றும் நடைபெறவுள்ளது.
இதனால், இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது. அதன் படி இந்தியா நேற்று இரவு 9 மணிக்கு அறிவித்தது. இதில், அணியில் இருந்த வீரர்களை விட, இந்த உலகக்கோப்பை தொடருக்கு ஆலோசகராக டோனி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், டோனி இதற்கு ஒப்புக் கொண்டதை நினைத்து பெருமையாக நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் பிற ஊழியர்கள் நன்று பழக்கமானவர்கள் என்பதால், டோனியை நியமிக்க முடிவு எடுத்தோம்.
இது குறித்து நாங்கள் டோனியிடம் பேசினோம். இதற்கு அவர் ஒத்துக் கொண்டார்.
அதன் பின் இது குறித்து சக ஊழியர்களிடம் நான் ஆலோசனை செய்தேன். அவர்களும் ஒத்துக் கொண்டதால், பிறகு அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் கோஹ்லி, துணைக்கேப்டன் ரோகித்சர்மா ஆகியோரிடமும் கேட்டோம், அவர்களும் சரி என்றவுடன், இதை இறுதி செய்தோம்.
ஆனால், டோனி இந்த உலக்கக்கோப்பை தொடருக்கு மட்டுமே தான் ஆலோசகராக இருப்பேன் என்று கூறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.