இந்த மாதிரியே தொடர்ந்து விளையாடினா பிரயோஜனம் இல்லை! இனியாவது... CSK வீரரை எச்சரித்த டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலி பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில் அவருக்கு டோனி எச்சரிக்கை கொடுத்ததோடு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
இன்று ஐபிஎல் ப்ளே ஆப்பில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகிறது. இந்நிலையில் தற்போது இந்த 14வது ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சென்னை அணி இப்போது இரண்டாவது பாகத்தில் சற்று தடுமாறி வருகிறது.
இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை அணியின் மிடில் ஆர்டர் வீக்னஸ் தான். ஏனெனில் சென்னை அணியின் துவக்க வீரர்களான டூபிளெஸ்ஸிஸ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் ரன் குவிக்க தவறினால் மிடில் ஆர்டரில் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க தற்போது சென்னை அணியின் கேப்டன் டோனி மொயின் அலியிடம் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி துவக்கத்தில் விக்கெட் விழும்போது நிச்சயம் மொயின் அலி மூன்றாவது வீரராக களமிறங்கி 30-35 ரன்களை விரைவாக அடிக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் துவக்கத்தில் விக்கெட் விழுந்தாலும் ரன்ரேட் அதிகரிக்கும்படி விளையாடினால் பின்வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு அது சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி முன்கூட்டியே விக்கெட்டுகள் விழுந்து ரன்ரேட் சரிந்தால் அதனை சரிப்படுத்துவது கடினமாக இருக்கும் என்ற காரணத்தினால் மொயின் அலியை விரைவாக ரன் குவிக்க டோனி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இப்படியே விளையாடுவது பிரயோஜனம் இல்லை எனவும் கூறியதாக தெரிகிறது.