இந்திய அணிக்கு ஆலோசகராகும் டோனியின் வேலை என்ன? அவர் இந்த பதவியில் என்ன செய்ய முடியும்? வெளியான தகவல்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசராக பதவி கொடுக்கப்பட்டுள்ள, டோனியின் வேலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் அக்டோர்பர் மாதம் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இந்திய அணி சமீபத்தில் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக டோனி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் பின், இந்திய அணியுடன் டோனி இணைந்து செய்யப்போகும் வேலை என்ன? இந்திய அணியில் ஏற்கனவே முதன்மை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் என அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் இருக்கும் வேளையில் அணியின் ஆலோசகராக டோனி என்ன வேலை செய்யப் போகிறார் ? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் அது குறித்து வெளியாகியுள்ள தகவலில், ரவி சாஸ்திரி கிரிக்கெட் விளையாடிய காலம் நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் டோனி தற்போது வரை வரை கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
அது மட்டுமின்றி இந்திய அணியில் இருக்கும் வீரர்களுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் உள்ளது. அதையும் தாண்டி டோனி டி20 கிரிக்கெட்டில் ஏகப்பட்ட அனுபவங்களை கொண்டவர்.
அவர் பார்க்காத எதிரணியோ, அவர் பார்க்காத பவுலர்களோ, அவர் பார்க்காத போட்டியின் இக்கட்டான சூழ்நிலையோ கிடையாது. இப்படி அனைத்தையும் பார்த்த அனுபவம் கொண்டவர் டோனி.
இதன் காரணமாக இந்திய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் எந்தெந்த போட்டிகளில் எப்படி எதிர்த்து எவ்வாறு விளையாட வேண்டும் ? எந்த நேரத்தில் பவுலர்களை மாற்ற வேண்டும் ? எந்தெந்த பீல்டிங் வியூகங்களை அமைக்க வேண்டும் ? போட்டிகளின்போது இக்கட்டான சூழலில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து தனது அனுபவத்தை நேரடியாக இந்திய அணியின் வீரர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்யப் போகிறார் என்பது தான் உண்மை.