இளவரசி டயானா சாகவில்லை., பாரிஸில் தலைமறைவாக வாழ்வதாக நம்பிய இளவரசர் ஹரி
இளவரசி டயானா இறக்கவில்லை என்றும், பாரிஸ் நகர குடியிருப்பில் தலைமறைவாக வாழ்ந்துவருவதாகவும் நம்பிக்கொண்டிருந்ததாக இளவரசர் ஹரி கூறியுள்ளார்.
நினைவுக் குறிப்பு புத்தகம் - Spare
இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தகமான Spare நாளை (ஜனவரி 10) வெளியாகிறது. ஆனால், ஓர் வாரத்திற்கு முன்பே ஸ்பெயினில் ஸ்பானிஷ் மொழியில் வெளியானதால், அதிலிருந்து சில அதிர்ச்சியூட்டும் பதிவுகள் கசிந்துவருகின்றன.
அதில் அவரது அவரது தந்தை சார்லஸ், டயானாவின் சோகமான மறைவு குறித்து அவருக்குத் தெரிவித்த தருணத்தை விவரிக்கும் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இளவரசர் ஹரி தனது தாயார் இளவரசி டயானாவே தனது விபத்தை அரங்கேற்றியதாகவும், அவர் பாரிஸ் நகரத்தின் ஒரு குடியிருப்பில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டு தான் இருப்பதாக தனது குழந்தை பருவத்தில் நம்பிக்கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
Getty Images; Shutterstock
கார் விபத்து
ஹரிக்கு 12 வயதாக இருந்தபோது அவரது தாயார் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் இறந்துவிட்டார் என்ற பயங்கரமான செய்தியைக் கேட்டபோது, தனக்கு இவ்வாறெல்லாம் தோன்றியதாக அவர் கூறியுள்ளார்.
அந்த புத்தகத்தில், டயானா மகிழ்ச்சியாக இல்லை என்பதால், தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதால், சிலரிடமிருந்து விலகி இருக்கவே, பொய்யான விபத்தை ஏற்பாடு செய்து இறந்துவிட்டதாக நாடகமாடி தலைமறைவானதாக ஹரி நினைத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
டயானா ஒரு பாரிஸ் குடியிருப்பில் வாடகைக்கு வசிப்பதாகவோ அல்லது சுவிஸ் ஆல்ப்ஸில் ரகசியமாக ஒரு லாட்ஜ் வாங்கியதாகவோ தான் நினைத்ததாக ஹரி கூறுகிறார்.
மேலும், "இதுதான் அவளின் சண்டை முறை. இன்னும் இரண்டு வாரங்களில் என் பிறந்த நாள் என்பதால் அவர் நிச்சயமாக திரும்பி வருவார்" என்று நம்பியுள்ளார்.
இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்வது, தனது தாயின் கொடூரமான மரணத்தை "மிகச் சிறப்பாக" சமாளிக்க உதவியது என்று ஹரி கூறியுள்ளார்.