பிரித்தானியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் செய்த செயல்! இணையத்தில் கசிந்த வீடியோ
பிரித்தானியாவில் பயோ பபுள் விதிகளை மீறி இலங்கை வீரர்கள் சாலையில் சுற்றி திரிந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளன, இங்கிலாந்து இலங்கை மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஜூன் 29ம் திகதி Durham நகரில் உள்ள Riverside மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளதால் ஒட்டு மொத்த இலங்கை அணியும் பயோ பபுளில் உள்ளன.
இந்நிலையில், டி-20 தொடரில் ஒயிட் வாஷ் ஆன கவலை கூட இல்லாமல் பயோ பபுள் விதிகளை மீறி இலங்கை வீரர்கள் குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நள்ளிரவில் Durham நகரில் சுற்றி திரிந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீடியோவின் உண்மை தன்மை குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு அணி மேலாளருக்கு இலங்கை கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது.
SLC has decided to bring back cricketers Kusal Mendis and Niroshan Dickwella for breaching the bio-bubble.
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) June 28, 2021
Video Credit - Nazzer Nisthar #ENGvSL pic.twitter.com/kfGrLC9MQv
அதேசமயம், குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு இலங்கை கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.