நான் தான் அப்பவ சொன்னேனா... இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்து கெவீன் பீட்டர்சன் போட்ட பதிவு
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், இந்திய அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் கோஹ்லியின் கேப்டன்சிப்பை விளாசி வருகின்றனர்.
கோஹ்லி கேப்டன் பதவியை விட்டு விலகி, ரஹானேவுக்கு கொடுக்க வேண்டும் என்ற குரலும் ஒலித்து வருகின்றன.
India , yaad hai maine pehele hi chetawani di thi ke itna jasn na manaye jab aapne Australia ko unke ghar pe haraya tha ?
— Kevin Pietersen? (@KP24) February 9, 2021
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவுஸ்திரேலியாவுடன் தொடரை வென்றவுடன் அதிக கொண்டாட்டம் வேண்டாம் என்று நான் தான் குறிப்பிட்டேனே என்று கிண்டல் செய்யும் விதமாக டுவிட் செய்துள்ளார்.
இந்த தொடருக்கு முன், அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரை, இந்தியா வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.