சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற இலங்கை நட்சத்திர வீரர்!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
ஓய்வு குறித்து முடிவை இலங்கை கிரிக்கெட்டிடம் தெரவித்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தில்ருவன் தெரிவித்துள்ளார்.
எனினும் தில்ருவான் பெரேரா தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்ருவான் பெரேரா இலங்கை அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 161 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் மற்றும் 1303 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார்.
தில்ருவான் ஓய்வு குறித்து இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய தில்ருவான் பெரேரா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
அவரது எதிர்கால திட்டங்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.