விமான விபத்தில் இந்திய வம்சாவளி பிரித்தானிய கிரிக்கெட்டர் உயிரிழப்பு
ஏர் இந்தியா விமான விபத்தில்இந்திய வம்சாவளி பிரித்தானிய கிரிக்கெட்டர் உயிரிழந்துள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் திகதி, லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.
இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விடுதியில் இருந்த மாணவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர்.

சும்மா பேசிக்கொண்டிருக்காமல் உதவி செய்யுங்கள்: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வருத்தம்
இந்த விமானத்தில் பயணித்த, 23 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டர் உயிரிழப்பு
குஜராத்தை பூர்விமாக கொண்ட திர்த் படேல் (Dirdh Patel), இங்கிலாந்தில் உள்ள ஹடர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவு பிரிவில் M.sc படித்துள்ளார்.
மேலும், திர்த் படேல் இங்கிலாந்தில் உள்ள leeds modernians cc என்ற அணிக்காக, iredale and Wharfedale Senior Cricket League தொடரில் விளையாடியுள்ளார்.
ஆல் ரவுண்டரான இவர், இந்த தொடரில் 312 ஓட்டங்களை எடுத்ததோடு, 29 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
மேலும், வேலையில் சேர்ந்த உடன், தன்னை வெளிநாட்டில் பிறந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தில் பதிவு செய்ய திட்டமிட்டிருந்துள்ளார்.
அவரின் மறைவிற்கு leeds modernians cc அணி மற்றும் அவர் படித்த பல்கலைகழக பேராசியர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |