இழிவான போராட்டம்... ரிஷி சுனக் குடியிருப்பில் இருந்து கைதான நால்வர்
பிரதமர் ரிஷி சுனக்கின் தொகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்புக்கு அருகே இழிவான போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைதாகியுள்ளனர்.
அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறி
வடக்கு யார்க்ஷயரில் உள்ள கிர்க்பி சிக்ஸ்டனில் உள்ள ரிஷி சுனக்கின் வீட்டிற்குள் நுழைந்த சில நிமிடங்களில் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.
உள்ளூர் நேரப்படி 12.40 மணிக்கு குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் நால்வரையும் அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறி பொலிசார் கைது செய்துள்ளனர். தற்போதும் அவர்கள் பொலிஸ் காவலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட Youth Demand என்ற அந்த அமைப்பு குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளது. ரிஷி சுனக்கில் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள ஏரியில் Oliver Clegg என்ற 21 வயது மாணவர் மலம் கழித்துள்ளார்.
அவர் அணிந்திருந்த சட்டையில் இழிவான சொற்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை Oliver Clegg முன்வைத்துள்ளார். காஸா போர் உட்பட பிரித்தானியாவின் நிலைப்பாட்டை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்களின் இந்த போராட்டமானது ரிஷி சுனக் மற்றும் அவரது அரசாங்கத்திற்கான பிரியாவிடை பரிசு என்றும் அந்த நால்வர் குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் மீது ஆயுதத் தடையை கோரும் பிரச்சாரத்தையும் அந்த குழு முன்னெடுத்துள்ளது.
கடும் விமர்சனம்
மட்டுமின்றி, 2021 முதல் வழங்கப்பட்ட அனைத்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமங்களையும் அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்றும் Youth Demand என்ற அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் ரிஷி சுனக்கின் இல்லத்தின் அருகே Youth Demand என்ற அமைப்பின் இழிவான செயலுக்கு சமூக ஊடகத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே, பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில்,
லண்டலைச் சேர்ந்த 52 வயது நபர், போல்டடைச் சேர்ந்த 43 வயது நபர், மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 21 வயது நபர் மற்றும் சிசெஸ்டரில் இருந்து 20 வயதுடைய ஒருவர் என நால்வர் கைதாகி விசாரணையை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |