பூமியின் மிகப் பழமையான விலங்கின் எச்சம் இந்தியாவில் கண்டுபிடிப்பு! 570 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தகவல்
570 மில்லியன் பழமையான விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் Unescoவின் பழங்கால பீம்பேட்கா கற்பாறை ஆராய்ச்சி மையம் உள்ளது.
அப்பகுதியில் உள்ள Auditorium Cave என அழைக்கப்படும் குகையின் கூரையின் மேல் உலகின் மிக அறிய வகை உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்ததாக கூறப்படும் Dickinsonia எனும் விலங்கின் எச்சம் இந்தியாவில் முதல்முறையாக கிடைத்துள்ளது.
கிடைத்துள்ள எச்சத்தைப் பொறுத்து அந்த விலங்கு 17 அங்குலம் நீளம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறைந்தது 541 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கும் என ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சத்தைக் கொண்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.