நடுவானில் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த பயணி.. உண்மையை உடைத்த பெண்!
பொதுவாகவே விமான பயணம் என்றாலே அனைவரும் ஆர்வத்துடன் செல்வார்கள். ஆனால் அதில் வேலை செய்யும் பெண்கள் பல விடயங்களை சந்திக்க நேரிடுகின்றது. அவ்வாறு ஒரு பணிப்பெண் சந்தித்த விடயங்கள் பற்றி பார்க்கலாம்.
நேர்ந்த துயரம்
விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விமானத்திலும் தகாத செயல்களில் ஈடுப்படுகின்றார்கள். இதை விமானப் பணிப்பெண் ஒருவர் தெரிவித்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
36000 அடி உயரத்தில் அமெரிக்காவின் சொகுசு விமான நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த மரிகா மிகுசோவா என்ற பெண் தான் இந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
துருக்கி பயணத்தின் போது, மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அவை விமானம் முழுவதும் சிந்தி, துப்புரவு பணியாளர்களும் முறையாக சுத்தம் செய்யாமல், குப்பையை போட்டு மூடி விட்டனர்.
சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒரு போர்வை அங்கு போடப்படும். காரணம், சுத்தம் செய்வதற்கு போதியளவு நேரம் இருக்காது.
இந்திய விமானங்களில் பயணிகள் தங்கள் கால்களைத் துடைக்க துண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒருமுறை நான் பயன்படுத்தும் துண்டை கேட்டு காலை துடைத்து விட்டு, அந்த டவலால் அக்குளை துடைத்து மீண்டும் அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
பயணிகள் அனைவரும் உணவு உண்ணும் போது, ஒரு பெண் தனது குழந்தையின் டயப்பரை மாற்றத் தொடங்கியுள்ளார், அந்த டயப்பரை அந்த பெண் தனது இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு சென்றாள். சில நேரங்களில் பெற்றோர்கள் இருக்கை பாக்கெட்டில் அழுக்கு டயப்பர்களை கூட வைக்கிறார்கள்.
சக பயணிகள் சாப்பிடும் போது இவ்வாறான செயலில் ஈடுப்படுவது வேதனைக்குறிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |