திருமணம் முடித்த கையோடு விவாகரத்து பெற்ற இளம் ஜோடி! என்ன காரணம் ?
ஈராக்கில் மணமேடையில் நடனம் ஆடிய குற்றத்திற்காக மணமகன், மணப்பெண்ணை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டின் தலைநகரான Baghdad என்கின்ற பகுதியில் மணப்பெண் ஒருவர் திருமணத்தின் போது “மெசைதரா” என்னும் சிரிய நாட்டின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
இந்த பாடலின் தொடக்கத்தில், நான் அதிகாரம் செலுத்துவேன். என் கண்டிப்பான அறிவுறுத்தலில் தான் நீ இருக்க வேண்டும். என்னோடு நீ இருக்கும் நாள் வரைக்கும் என் ஆணையின்படி தான் நீ இருப்பாய், நான் திமிர் பிடித்தவள் என்று அர்த்தம் இருந்திருக்கிறது.
மேலும் இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியது அங்கு வந்திருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும் மணப்பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையில் பெரிய சண்டை வெடித்துள்ளது.
இப்படியாக இரு குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்ட சண்டை பெரிய அளவில் வெடிக்கவே மணமகன் திருமணத்தன்றே மணப்பெண்னை விவாகரத்து செய்துள்ளார். இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த 2021 ஆண்டு ஜோர்டானில் நடந்தது குறிப்பிடத்தக்கது.