முன்னாள் மனைவியை அவரது பிறந்த நாளான்று கொடூரமாகக் கொன்று தூக்கிலிட்ட கணவர்
அவுஸ்திரேலிய நாட்டில் அட்ரியன் ஜேம்ஸ் பாஷாம் என்பவர் விவாகரத்தான தனது முன்னாள் மனைவியின் பிறந்த நாளில் அவரை கொடூரமாகக் கொன்று தூக்கிலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த நாளில் நேர்ந்த சோகம்
அவுஸ்திரேலிய நாட்டில் அட்ரியன் ஜேம்ஸ் பாஷாம் என்பவரின் முன்னாள் மனைவி சமந்தா ஃப்ரேசர், 2018 ஜுலை 22-ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
ஜுலை 23 அன்று தனது மூன்று குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்த பிறகு, பிலிப் தீவிலுள்ள தனது கேரேஜிற்குள் சென்றிருக்கிறார்.
@vic police
அங்கே மறைந்திருந்த அவரது முன்னாள் கணவர் அட்ரியன் ஜேம்ஸ் பாஷாம் அவரை கொடூரமாக அடித்துள்ளார். சமந்தா ஃப்ரேசடின் உடலில் 41 வெட்டுக் காயங்கள் உண்டாகும் வரை அடித்து, பின்பு அவரது கழுத்தில் கயிறு கட்டி கேரேஜ் கதவில் தூக்கிலிட்டுக் கொண்டதை போல் தொங்கவிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை வழங்கிய நீதி மன்றம்
”எந்த விதத்திலும் நீங்கள் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, மிகவும் கொடுமையாக அடித்துத் துன்புறுத்தி அட்ரியன் ஜேம்ஸ் பாஷாம் தூக்கிலிட்டுள்ளீர்கள்” என நீதிபதி லெஸ்லி டெய்லர் கூறியுள்ளார்.
அட்ரியன் ஜேம்ஸ் பாஷாமுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
காவல் துறையினர் அட்ரியனை வெளியே அழைத்துச் செல்லும் போது சமந்தா ஃப்ரேசரின் உறவினர்களும் நண்பர்களுக்கும் கை தட்டி தீர்ப்பை வரவேற்றனர்.
துஷ்பிரயோக வழக்கைத் தடுக்கவே திட்டம்
அட்ரியன் ஜேம்ஸ் பாஷாமும், சமந்தா ஃப்ரேசரும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.
பத்து ஆண்டுகளாக அவர் தன் மனைவியை துஷ்பிரோயம் செய்ததோடு மட்டுமில்லாமல் அவரை பல வகையில் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்.
@facebook
சமந்தா அவரிடமிருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார். அவரது மனைவி அவர் மீது துஷ்பிரோயாக வழக்குப் பதிவு செய்திருந்தார்.
அவருக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை கொலை செய்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.