உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்! பூஜை செய்ய உகந்த நேரம் இது தான்
உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை, தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து ஒளி ஏற்றி வழிபடும் நாள் என்பதால் தீபாவளி என்றழைக்கப்படுகிறது.
இன்றைய தினம் புத்தாடைகளுடன் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டு சொந்தங்கள், நண்பர்களுடன் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலையில் எழுந்தவுடன் எண்ணெய் குளியலில் இன்றைய நாள் தொடங்கும், இந்த பதிவில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தீபாவளியன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், அதாவது சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழ வேண்டும்.
நீரில் கங்கை இருப்பதாக ஐதீகம் இருப்பதால், அதிகாலையில் எழுந்து நீராடுவது ஐஸ்வர்யத்தை பெருக்கும் என நம்பப்படுகிறது.
அடுத்ததாக புத்தாடை அணிந்து கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி வாங்க வேண்டும், பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாக தீபாவளி அன்று மாலை குபேர பூஜை செய்ய வேண்டியது அவசியம், தொழில் செய்யும் நபர்கள் வியாபாரம் பெருக வணிக தலங்களில் பூஜை செய்வார்கள்.
லட்சுமி தேவி மற்றும் குபேரனின் படங்களுடன் வீட்டில் விளக்கேற்றி தங்க ஆபரணங்களுடன் பூஜை செய்வது லாபத்தை அதிகரிக்கும், மாலை 6 மணிமுதல் 8 மணிவரை பூஜை செய்யலாம்.
தொடர்ந்து கஷ்டப்படும் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருவதும் இனிவரும் நாட்களில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பதும் ஐதீகம்!!!!