தவறுசெய்துவிட்டோம்.... உண்மையை ஒப்புக்கொண்ட ஜோக்கோவிச்!
அவுஸ்திரேலிய பயண நுழைவு படிவத்தில் தவறான பதில் அளிக்கப்பட்டதை செர்பியா டென்னிஸ் வீரர் ஜோகோவிச் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கான விசா ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற சட்ட போராட்டத்தில் செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
டிசம்பர் 16 அன்று கொரோனா தொற்று உறுதியான பிறகு கிறிஸ்மஸ் தினத்தன்று Belgrade-ல் தெருவில் ஜோகோவிச் டென்னில் விளையாடியது மற்றும் டிசம்பர் 31ம் திகதி ஸ்பெயினில் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவுஸ்திரேலிய பயண நுழைவு படிவத்தில், கடந்த 14 நாட்கள் தான் வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்கவில்லை என ஜோகோவிச் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய பயண நுழைவு படிவத்தில் தவறான பதில் அளிக்கப்பட்டதை ஜோகோவிச் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மனித தவறு, நிச்சயமாக வேண்டுமென்றே செய்யவில்லை.
நாம் உலகளாவிய தொற்றுநோய்கள் மத்தியில் சவாலான காலங்களில் வாழ்கிறோம், சில சமயங்களில் இந்த தவறுகள் ஏற்படலாம்.
தனது பயிற்சி ஊழியர்கள் தவறுதலாக நுழைவு படிவத்தில் பதிலளித்ததாக ஜோகோவிச் குறிப்பிட்டுள்ளார்.