“முதுகில் குத்தியது காங்கிரஸ்” - திமுக கடும் கண்டனம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை “முதுகில் குத்திய துரோகம்” எனக் கூறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் பெற்றிருந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நாட்களிலேயே காங்கிரஸ் மாற்று அணிக்கு ஆதரவு அளித்துள்ளது. இதை திமுக “தோழமை சக்திகளுக்கு துரோகம்” எனக் கண்டித்துள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், “காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
கூட்டணிக் கட்சிகளின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து, வேறு அணிக்கு மாறியது. இது மிகப்பெரிய துரோகம்” எனக் கூறப்பட்டது.
மேலும், “பாஜக பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் தமிழ்நாட்டில் செய்துள்ளது.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே எதிர்மறையான கருத்துகளை காங்கிரஸ் தடுக்கவில்லை. தேர்தல் நடக்கும் போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ்” எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திமுக, தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், “மக்கள் நமக்கு வைத்துள்ள நம்பிக்கை மிகப்பெரியது.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும், வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு. திமுக என்றும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும்” என உறுதியளித்தது.
இந்தக் கண்டனம், தமிழக அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#DMK #Congress #TamilNaduElections #PoliticalCrisis #MKStalin #BreakingNews