ஜேர்மனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அலுவலகப் பணி செய்யவேண்டுமா?
ஜேர்மனியில், கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பிலிருந்ததாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்கள், தங்களை 10 நாட்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது.
அப்படி தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் அலுவலகப் பணி செய்யவேண்டுமா?
சட்டம் என்ன சொல்கிறது?
வீட்டிலிருந்தபடி பணி செய்தல்
தனிமைப்படுத்தலில் பணி செய்யவேண்டுமா என்ற கேள்வி எழும் நிலையில், நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது, வீட்டிலிருந்து பணி செய்தல் கட்டாயமா என்பது.
ஆம், சில குறிப்பிட்ட அலுவலகப் பணி செய்யும் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கவேண்டியிருக்கும்.
அதே நேரத்தில், உணவகங்களில் பணியாற்றுவோர், கட்டிடப்பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றவேண்டியதில்லை, வீட்டிலிருந்து அவர்கள் பணியாற்ற வாய்ப்பும் இல்லை.
ஆனால், நீங்கள் தடுப்பூசி பெறாதவரானால், தனிமைப்படுத்தல் காரணமாக பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அதனால் நீங்கள் இழந்த ஊதியம் திரும்பக் கிடைக்காது.
எந்த சூழலில் நீங்கள் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்கிறீர்கள் என்பது கருத்தில் கொள்ளப்படும்
உதாரணமாக, ஒருவர் தனிமைப்படுத்தலிலிருக்கிறார், அவருக்கு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்வது கடினம்.
அதே நேரத்தில், எந்த தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழும் ஒருவர் பணி செய்வதற்கு சாகுப்போக்குச் சொல்ல முடியாது.
எல்லா வகை பணிகளையும் வீட்டிலிருந்தவண்ணம் மேற்கொள்ள இயலாது
அலுவலகப் பணி செய்வோர், உதாரணமாக, பள்ளி ஒன்றில் நிர்வாகப்பணி செய்யும் ஒருவர் வீட்டிலிருந்தே எழுத்து வேலைகளைச் செய்ய இயலும்.
ஆனால், பள்ளியில் துப்புறவுப் பணி செய்யும் ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்தால், அவர்களுக்கு திடீரென எழுத்து வேலை போன்ற ஒரு வேலையை நிர்வாகம் கொடுக்க முடியாது.
உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் உருவாகி, அதாவது நீங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?
உங்களுக்குக் கொரோனா அறிகுறிகள் காணப்படும் நிலையில், அதாவது நீங்கள் நோய்வாய்ப்படும் நிலையில், உங்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு (sick leave), அளிக்கப்படும். உங்களை பணி செய்யுமாறு அலுவலகம் கேட்கவும் கூடாது!