காலையில் எழுந்ததும் தும்மலா? உஷார் இருங்க மக்களே
ஒரு திருமணம் நடக்கும் பொழுது யாராவது தும்மினால் அபசகுணம் என்று அவர்களை சொல்வார்கள். ஆகவே அவர்களும் நற்காரியங்கள் நிகழும் இடங்களுக்கு செல்ல தயங்குவார்கள்.
தும்மல் ஏன் வருகின்றது?
காற்று தவிர்ந்த தூசு, துகள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதனால் தான் தும்மல் ஏற்படுகின்றது.
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ ஆகும். ஒரு சிலர் விடாமல் தும்மிக் கொண்டே இருப்பார்கள். “அதற்கு ஒவ்வாமை தும்மல்” என்றும் பெயர்.
ஒவ்வாமை தும்மலின் காரணம் என்ன?
முட்டை, எலுமிச்சை, தக்காளி என்று சில உணவுகளாலும் இது தூண்டப்படுகிறது.
வீட்டுத் தூசி, பஞ்சு, சிமெண்ட், சுண்ணாம்பு, குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை மற்றும் தொழிற்சாலை புகை போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும்.
தும்மலை எவ்வாறு நிறுத்துவது?
முதலில் சமையல் உப்பை எடுத்து 200 மி.லி. இளம் சூடான தண்ணீரில் கலந்து, சுத்தமான துணியை அந்தத் தண்ணீரில் நனைத்து திரி போலச் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாசித் துளையிலும் விட்டு மூக்கைச் சுத்தப்படுத்தினால் தும்மல் நிற்கும்.
குறிப்பு:- கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் வைத்தியரிடம் செல்ல வேண்டும்.