திருமணம் முடிந்த சில நாட்களிலே பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட சோகம்.. ஆப்கனில் நடந்த துயர சம்பவம்!
ஆப்கானில் பெண் மருத்துவர் ஒருவர் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதால் தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் அந்த நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றி தங்களது ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலையும் தங்களது கைவசத்தில் வைத்துள்ளார்.
தாலிபான்களின் கொடூர ஆட்சிக்கு பயந்து மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி உலக நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் இவர்களின் ஆட்சி கொடூர ஆட்சியாக மாறியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்கன் நாட்டில் அமைந்துள்ள ஹெராத் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் சோதனைச் சாவடி அமைத்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்துள்ளார்கள்.
அப்பொழுது அங்கு வந்த சமீபத்தில் திருமணம் முடிந்த 33 வயதாகும் இளம் மருத்துவர் ஒருவர் தலிபான்கள் அமைத்துள்ள சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனால் தலிபான்கள் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற 33 வயதாகும் மருத்துவரை ஈவு இரக்கமில்லாமல் நடுரோட்டில் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.