கனடாவில் சிகிச்சைக்காக வந்த 16 மற்றும் 26 வயதான இரண்டு பெண் நோயாளிகளிடம் தவறாக நடந்த மருத்துவர் கைது
கனடாவில் இரண்டு பெண் நோயாளிகளிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவை சேர்ந்த மருத்துவர் ஜார்ஜ் போல்மிடியோடிஸ் (54). இவரிடம் சிகிச்சை பெற வந்த 16 மற்றும் 26 வயதான இரண்டு பெண் நோயாளிகள் மீது பாலியல் ரீதியான தாக்குதலை ஜார்ஜ் நடத்தியுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜார்ஜ் அடுத்த வியாழன் அன்று வீடியோ அழைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
ஜார்ஜால் வேறு சில பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.