நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சையை தொடர்ந்த மருத்துவர்கள் - வைரலாகும் வீடியோ
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கும் போதும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் ஜப்பானை 13 அடி உயர சுனாமி தாக்கியுள்ளது. இதில் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள துறைமுகங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனையடுத்து, சீனா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூஸிலாந்து உட்பட பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்பகுதியில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக அறியப்படுகிறது.

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்!
அறுவை சிகிச்சை
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கிய போதும், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை நிறுத்தாமல், இறுதிவரை நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
Doctors in Kamchatka kept calm during the powerful quake — and never stopped the surgery
— RT (@RT_com) July 30, 2025
They stayed with the patient until the end
The patient is doing well, according to the Health Ministry pic.twitter.com/swtdBFSpm5
ரஷ்யாவின் கம்சட்காவில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த நோயாளி நலமுடன் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |