உக்ரைன் மக்களுக்காக பொழிந்த பணமழை! சிதறி கிடந்த நோட்டுகள்... வைரலாகும் வீடியோ
உக்ரைன் மக்களுக்கு நிதி திரட்ட அமெரிக்க இந்தியர்களிடையே பிரபல பாடகி கீதாபென் பாட்டு கச்சேரி நடத்திய நிலையில் அவர்கள் பணமழை பொழிந்துள்ளனர்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 35 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக உக்ரைன் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து உலகளவில் உக்ரேனியர்களுக்கு உதவ பணம், மற்றும் பொருட்கள் திரட்டப்படுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பங்களிப்பாளர்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஞாயிறு அன்று குஜராத்தை சேர்ந்த பாடகி கீதாபென் ரமரி அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஆடிட்டோரியத்தில் கூடியிருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உக்ரைன் மக்களுக்கு நிதி திரட்டும் நோக்கி இசை கச்சேரி நடத்தினார்.
அப்போது அங்கிருந்த மக்கள் டொலர்களை மழை போல மேடையை நோக்கி வீசினார்கள். இதையடுத்து பாடகி கீதாபென்னை சுற்றிலும் டொலர் நோட்டுக்களாக சிதறி கிடந்தது.
மேலும் பாடலை ரசித்தபடி பலரும் நடனமாடியதையும் காண முடிந்தது.
தகவலின்படி அந்த இசை நிகழ்ச்சியின் மூலம் மட்டும் $ 300,000 நிதி கிடைத்துள்ளது.