ஐபிஎல் தொடரிலிருந்து சுட்டி குழந்தை விலகியதால் அவருக்கு பதிலாக விளையாட போறது யார் தெரியுமா? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ் என்பவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரனுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரில் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ப்ளே ஆஃப் நெருங்கும் சமயத்தில் சாம் கர்ரன் விலகியது சிஎஸ்கே அணி சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பிராவோ ஓய்வில் உள்ள சமயங்களில் அந்த இடத்தை சாம் கரன் நிரப்பி வந்தார்.
இந்த சூழலில் சாம் கரன் விலகியுள்ளதால் பிராவோக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. அதனால் சாம் கரனுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என சிஎஸ்கே அணி தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ் என்பவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட இவர் விளையாடவில்லை.
ஒரே ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியிலும், 25 முதல் நிலை போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.
இந்த சூழலில் ஐபிஎல் லீக் தனது கடைசி லீக் போட்டியில் இன்று (07.10.2021) பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது.