ரெம்ப கஷ்டமா இருக்கு...தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ரிஷப் பாண்ட்
கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பின், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்னொரு அணி எது? என்பதற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
பரபரப்பான இப்போட்டியில் கொல்கத்தா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது, கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்போட்டி முடிந்த பின்பு ரிஷப் பாண்ட மிகவும் வேதனையுடனே பேசினார். அப்போது, நான் இப்போது என்ன உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை.
ஆனால், போட்டி முடிந்த பின்பு எதையும் மாற்ற முடியாது. டெல்லி அணியின் கேப்டனாக எனக்கு நம்பிக்கை எப்போதும் இருக்கிறது. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக போட்டியை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். துரதிருஷ்டவசாம போட்டி கடந்து சென்றுவிட்டது.
அடுத்த வருடம் மீண்டும் நாங்கள் வலுவாக திரும்புவோம், கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது, அடுத்த ஆண்டு இதை விட முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.
வெற்றிக் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், துவக்க வீரர்கள் எங்களுக்கு ஒரு சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
இதன் காரணமாக நாங்கள் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் உள்ளோம். இன்று வெற்றி தேடித்தந்த திரிபாட்டி பல முறை எங்களுக்கு இது போன்ற வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
வெங்கடேஷ் அய்யரை பொறுத்தவரை அவர் வேறு விக்கெட்டில் பேட்டிங் செய்வது போல் தெரிகிறது.
இறுதிப் போட்டியில் எதுவும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.