நடுவானில் பெண் ஒருவருக்கு இருமுறை மாரடைப்பு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
பெண் ஒருவருக்கு தொடர்ந்து இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவுக்கு பயணப்பட்ட விமானம் ஒன்று இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
லண்டனுக்கு புறப்பட்ட விமானம்
விமான ஊழியர்களும் மருத்துவர் ஒருவரும் தொடர்புடைய பயணிக்கு CPR அளிக்க முன்வந்துள்ளனர். தொடர்புடைய விமானமானது Tunis பகுதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட நிலையிலேயே அந்த பயணி மாரடைப்பால் அவதிப்பட்டுள்ளார்.
@Ansa
இதனையடுத்து புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்கும் கட்டாயத்திற்கு விமானி தள்ளப்பட்டார். தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இத்தாலியின் ஓல்பியா விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
லிபியா நாட்டவரான பெண்
தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக் குழுவினரால் அந்த பயணி விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டார். உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதை அடுத்து லிபியா நாட்டவரான குறித்த பெண் காப்பாற்றப்பட்டார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீவிர மற்றும் பொருத்தமான மருத்துவ சிகிச்சை பெறும் பொருட்டு குறித்த பெண் இத்தாலியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவருடன் அவர் மகனும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |