வளர்த்த கிடா மார்பில் உதைத்துவிட்டது! அம்மாவின் மீதே போத்தலை வீசினார் - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணியை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது ஒரே மேடையிலேயே எதிரொலித்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கட்சி நிறுவினர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை கண்டித்து பல விடயங்களை பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன். தவறு செய்தது அன்புமணி அல்ல; 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன். எங்கள் கட்சியை பற்றிய செய்திகளை பலமுறை கேள்வி கேட்டுள்ளீர்கள், நானும் பதில் அளித்துள்ளேன்.
தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் பதவி நீக்கம்? என்றும் அன்புமணி பேசியிருந்தார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும்.
தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் பெற முயற்சி செய்துள்ளார். அதற்கு உண்டான விளக்கம் அளிப்பது என் கடமையாகும்.
இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை கொண்ட மருந்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார்" என்றார்.
மேலும் அவர், வளர்த்த கிடாவே என் மார்பில் எட்டி உதைத்துவிட்டது. அழகான ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார்? கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது, அவரது அம்மாவின் மீதே போத்தலை வீசி எறிந்தார். நல்லவேளை போத்தல் அவர் மீது படவில்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |