நூலிழையில் தப்பிய வெற்றி! போட்டி முடிந்த பின்பு மைதான ஊழியர்களுக்கு 35000 ரூபாய் கொடுத்த ராகுல் டிராவிட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு மைதான பராமரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.
நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு கான்பூர்மைதானத்தின் மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் 35000 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.
ஏனெனில், போட்டி இறுதி நாள்வரை சுவாரசியம் குறையாமல் நடைபெறும்படி மைதானத்தை தயார் படுத்தியது மட்டுமின்றி ஒவ்வொரு நாள் ஆட்டத்திற்கு பின்பும் அதை சரியான முறையில் மைதான ஊழியர்கள் பராமரித்ததன் காரணமாகவும் அவர்களின் பணியை பாராட்டி டிராவிட் அந்த தொகையை வழங்கியுள்ளார்.
டிராவிட்டின் இந்த செயல் குறித்து அம்மாநில கிரிக்கெட் சங்கம், இனி எப்போது இங்கு டெஸ்ட் நடைபெற்றாலும், தரமான மைதானத்தை கொடுப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.