ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக வாய்ப்பே இல்லை! ஏன்? முன்னாள் வீரர் சொல்லும் காரணம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு டிராவிட்டிற்கு வாய்ப்பே இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
ராகுல்டிராவிட் தலைமையிலான இந்திய இளம் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றிவிட்டது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கும், ராகுல் டிராவிட்டிற்கும் தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் சீனியர் அணிக்கும் டிராவிட்டையே பயிற்சியாளர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், இந்திய அணியின் பயிற்சியாளருக்கான போட்டியில் ராகுல் டிராவிட் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்.
ஒருவேளை அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பினால், அவருக்கு ஒரே போட்டி ரவி சாஸ்திரியாகத்தான் இருப்பார்.
ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ரவி சாஸ்திரியே தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்றே நினைக்கிறேன் என கூறியுள்ளார்.