200 சிலிண்டர்களுடன் தானாக இயங்கிய லொறி; உயிரை பணயம் வைத்து பெரும் விபத்தை தடுத்த ஓட்டுனர்! வைரல் வீடியோ
நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர்களுடன் புறப்பட தயாராக இருந்த லொறி தானாக இயங்கியபோது, ஓட்டுநர் உயிரைப் பணயம் வைத்து வாகனத்தை நிறுத்திய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரேசிலில் Minas Gerais மாகாணத்தில், Ibirite பகுதியில் கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
சுமார் 200 முழு எரிவாயு சிலிண்டர்களை லொறியில் நிரப்பிக்கொண்ட ஓட்டுநர், புறப்பட தயாராக எஞ்சினை ஸ்டார்ட் செய்துவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த லொறியில் தானாகவே முதல் கியர் விழுந்து ஓட்டுனரை இடித்துக்கொண்டு முன்னே நகர ஆரம்பித்தது.
[VSBXED
அது வேகமாக ஒரு சுவற்றில் மோதவிருந்த நிலையில், அவர் வண்டியில் ஏறாமலேயே சாதுரியமாக ஸ்டேரிங்கை திருப்பினார்.
அனால், வண்டி இன்னும் வேகமாக பாறையின் மேலிருந்து பள்ளத்தாக்கில் கீழே விழச்சென்றது. அதற்குள் உள்ளே ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து லொறியை மிகப் பெரிய விபத்திலிருந்து அவர் தடுத்து நிறுத்தினார். ]
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.