விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க படைகளை குறிவைத்து சரமாரி தாக்குதல்!
ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷ
பாக்தாத் சர்வதேச விமான நலையத்திற்கு அருகே உள்ள இராணுவ தளம் மீது டிரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த இராணுவ தளத்தில் அமெரிக்க வீரர்கள் தங்கயிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிரோன் தாக்குதலில் உயிரிழப்பு அல்லது யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா, கட்டிடங்கள் சேதமடைந்ததா என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
சில தினங்களுக்கு முன் இதே இராணுவ தளம் மீது டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.