சவுதி அரேபிய சர்வதேச விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்! 10 பேர் காயம்
சவுதி அரேபியாவின் ஜசன் நகரில் உள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இன்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஜசன் நகரின் விமான நிலம் மீது டிரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டடுள்ளது.
இதை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்தது.ஆனால், சில குண்டுகள் விமான நிலையம் மீது விழுந்தன.
இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர் அதில் 6 பேர் சவுதி அரேபியாவையும், 3 பேர் வங்காளதேசத்தையும், ஒருவர் சூடானையும் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிரோன் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சவுதி அரேபிய அரசு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.