ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் முயற்சி
Third drone found near Leipzig airport: லீப்சிக் விமான நிலையத்திற்கு அருகே மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்கள்.
லீப்சிக் விமான நிலையத்தின் மீதான தாக்குதல் முயற்சியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்களை ஜேர்மன் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
விரைவில் வெளியிடும்
முறியடிக்கப்பட்ட நாசவேலை முயற்சி நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14 அன்று, லீப்சிக் விமான நிலையத்திற்குச் சற்று மேற்கே உள்ள கேபெல்ஸ்கெட்டாலில் (Kabelsketal) அந்த ட்ரோன் கண்டெடுக்கப்பட்டது; அதனுடன் சுமார் 50 கிராம் (1.8 அவுன்ஸ்) எடையுள்ள, இராணுவத் தரத்திலான வெடிபொருள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பொருளும் இருந்தது.

லீப்சிக் விமான நிலையமானது நேட்டோ (NATO) மற்றும் உக்ரைனின் அன்டோனோவ் ஏர்லைன்ஸ் (Antonov Airlines) ஆகியவற்றால் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் சரக்கு மற்றும் இராணுவப் போக்குவரத்துக்கான ஒரு மையமாகும்.
இந்த விவகாரத்தில் விசாரணையை முன்னெடுத்துவரும் தலைமை சட்டத்தரணி அலுவலகம், செவ்வாய்க்கிழமை அன்று கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஆனால், ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருப்பதாகக் கருதப்படுகிறது என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று ஜேர்மன் சேன்ஸ்லர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.

அவர்கள் இதற்கானத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்ட மெர்ஸ், பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து அரசாங்கம் இது குறித்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது என்றும் விரைவில் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் முயற்சியில் ரஷ்ய உளவுத்துறையின் தொடர்பு இருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்படும் நிலையில், ரஷ்யா அத்தொடர்பை மறுத்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்யாவோ அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்புடைய தரப்போ இதற்குப் பொறுப்பு என்று கருதுகிறதா என்பது குறித்து, தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை ஜேர்மானிய அரசாங்கமும் இதுவரை தவிர்த்து வந்துள்ளது.
இந்தத் தாக்குதல் முயற்சி, ஜேர்மனி அதிகளவில் இலக்காகி வருவதைக் காட்டுவதாக மெர்ஸ் கூறியுள்ளார். ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் உக்ரேனிய அன்டோனோவ் சரக்கு விமானத்திற்கு அருகே, வெடிபொருட்களுடன் இராணுவ ட்ரோன் ஒன்று ஆகஸ்ட் 4 அன்று கண்டெடுக்கப்பட்டது.
விசாரணை அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த அந்த விமானத்தின் இறக்கைகளில் அந்த ட்ரோன் தரையிறங்கும் நோக்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.
முதல் ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது ட்ரோன் ஒன்று டிஹெச்எல் (DHL) சரக்கு விமானம் ஒன்றின் மீது மோதியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக அந்த விமானம் தனது தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு மார்சேய் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூன்றாவது ட்ரோன், லீப்சிக் விமான நிலையத்தின் மேற்கு எல்லையை நேரடியாக ஒட்டியுள்ள ஒரு நகராட்சியின் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, அதிக வெடிப்புத்தன்மை கொண்ட ஹெக்சோஜென் என்ற வேதிப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு பொருளின் எச்சங்களை காவல்துறை அதிகாரி கண்டெடுத்தார்.
இந்த நிலையில், வெளியேத் தெரிந்ததை விட மிகப்பாரிய தாக்குதல் ஒன்றைத்தான் குற்றவாளிகள் திட்டமிட்டிருக்கக்கூடும் என செய்தி ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
அந்த ட்ரோன்கள் வெடித்திருந்தால், அவை ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |