அவசரமாக மூடப்படும் விமான நிலையங்கள்... அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் உக்ரைனால் திணறும் ரஷ்யா
உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து மாஸ்கோ நகரில் இரண்டு விமான நிலையங்களை ரஷ்யா அவசர அவசரமாக மூடியுள்ளது.
அனைத்து சேவைகளும் ரத்து
ராணுவ விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சூப்பர்சோனிக் அணு குண்டுவீச்சு விமானம் ஒன்று ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது.
@getty
தலைநகர் மாஸ்கோவில் செயல்பட்டு வரும் Domodedovo மற்றும் Vnukovo விமான நிலையங்களை தற்காலிகமாக மூடப்படுவதுடன் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு விமான நிலையங்களில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், எந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 50 மைல்கள் தொலைவில் உள்ள Sheremetyevo விமான நிலையத்திற்கு விமானங்களை திருப்பி விட்டுள்ளனர்.
விளாடிமிர் புடினின் விலையுயர்ந்த போர் விமானம் ஒன்று ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்துள்ளதை அடுத்தே ரஷ்ய அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். உக்ரைனில் இருந்து சுமார் 700 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ராணுவ விமான நிலையத்திலேயே அந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
உக்ரைன் பயங்கரவாத தாக்குதல்
சேதமடைந்த போர் விமானத்தை உடனடியாக இன்னொரு பகுதிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, உக்ரைன் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க துவங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இதுபோன்ற ஒரு தாக்குதலை முறியடித்துள்ளதாகவும் ரஷ்யா தரப்பு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இன்று காலை மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் ரயில் நிலையத்தில் ட்ரோன் தாக்குல் முன்னெடுக்கப்பட்டதில் 5 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தின் கூரையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலில் 7 பேர்கள் கொல்லப்பட்டதுடன், சிறார்கள் உட்பட 100 பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |