இந்தியா உட்பட 3 நாடுகளுடன் விமான சேவையை தொடங்கும் பிரபல நாடு!
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளிடையே சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாக துபாய் அறிவித்துள்ளது.
கடந்த 15 மாதங்களாக சர்வதேச போக்குவரத்தை தடை செய்திருந்தத் தொடர்ந்து, வரும் ஜூன் 23 முதல் இந்தியா தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் இன்று அறிவித்துள்ளது.
ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையின்படி, துபாய்க்கு வரும் பயணிகள் கண்டிப்பாக கொரோனாவுக்கு எதிரான 2 தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டுமென்றும், அதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, PCR சோதனை உள்ளிட்ட துபாய் அரசு விதிக்கும் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை சுழலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சினோபார்ம், ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் வி மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா ஆகிய 4 தடுப்பூசிகளை ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்துள்ளது.
இந்தியா மற்றும் துபாய் இடையே மீண்டும் விமான போக்குவரத்து ஆரம்பித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதி என்பது என்பதால் விரைவில் துபாய் செல்லவிருக்கும் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.