போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்
மத்திய கிழக்கில் நடைபெறும் ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் துபாயின் தங்க வர்த்தகத்திலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், துபாயில் சிக்கிய தங்கம் உலக சந்தை விலையை விட தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.
தங்கம் பொதுவாக பயணிகள் விமானங்களில் சரக்கு பிரிவில் கொண்டுசெல்லப்படுகிறது.
ஆனால் ஈரான் ஏவுகணை தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வழி பகுதி அளவில் மூடப்பட்டுள்ளதால் பல விமானங்கள் துபாயில் சிக்கியுள்ளன.

இதனால், விற்பனையாளர்கள் லண்டன் சந்தை விலையை விட 30 டொலர் வரை (1 Ounce) தள்ளுபடி வழங்கி விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்தியாவிற்கு துபாயிலிருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் உடனடி தேவை குறைவாக இருந்தாலும், நீண்டகாலமாக இந்த நிலை நீடித்தால் சிக்கல்கள் உருவாகும் என Augmont Enterprices மற்றும் Metal Focus நிறுவன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், MMTC-PAMP போன்ற இந்தியாவின் பாரிய தங்க சுத்திகரிப்பு நிறுவனங்கள், மத்திய கிழக்கில் இருந்து வரும் dore (அரை சுத்திகரிப்பு தங்கம்) விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
போர் தொடங்கியதிலிருந்து போக்குவரத்து செலவுகள் 60 முதல் 70 சதவீதம் அதிகரித்துள்ளன.
தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 5,172 டொலர் வரை உயர்ந்துள்ளது. ஆனால், போர் நீடித்தால் தங்க விநியோகம் மற்றும் விலை நிலைமை மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Dubai gold discount, Iran Israel war impact, Gold shipments stranded UAE, India gold imports Dubai, Middle East bullion trade, Global gold price surge, MMTC-PAMP dore supply issues, UAE flight restrictions gold #DubaiGold #IranIsraelWar #GoldTrade #MiddleEastCrisis #GlobalMarkets #IndiaGold #Bullion #GoldPrices