டப்ளின் நகரில் வெடித்த கலவரம்: 34 தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் அதிரடியாக கைது
அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்த கலவரத்திற்கு காரணமான 34 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டப்ளின் கலவரம்
அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள Gaelscoil Choláiste Mhuire பாடசாலை அருகே மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் இறங்கியுள்ளார்.
இதில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கத்திக்குத்து சம்பவத்தை காரணமாக வைத்து தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் டப்ளின் நகர சாலையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்ததோடு, பொலிஸ் வாகனங்கள், பேருந்து, கட்டிடங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அயர்லாந்து தலைநகரில் பரபரப்பு அதிகரித்து, கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
34 பேர் கைது
இந்நிலையில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கலவரத்துக்கு காரணமான 34 தீவிர வலதுசாரி ஆதரவாளர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அயர்லாந்து பொலிஸ் தலைவர் Drew Harris வழங்கிய தகவலில், இந்த கலவரத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்து இருப்பதாகவும், பள்ளிக்கு வெளியே 5 வயது சிறுமி தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த கலவரம் வெடிக்க தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கலவரக்காரர்கள் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட பைத்தியக்காரப் பிரிவு என Drew Harris குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி குடிமக்களுக்கு விசா தேவையில்லை: உலகின் 2வது பெரிய பொருளாதார நாடு அறிவிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |