இந்தியா, தாய்லாந்தால் உச்சம் தொட்ட விலை உயர்வு... 13 ஆண்டுகளில் முதல் முறை: முழு பின்னணி
இந்தியா மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக உலக சர்க்கரை விலை செப்டம்பர் மாதத்தில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலைகளில் ஏற்பட்டுள்ள லேசான சரிவு
இருப்பினும் ஒட்டுமொத்த உணவுக் குறியீடு பெரும்பாலும் மாற்றம் இன்றியே காணப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு முகமை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பால் மற்றும் மாமிசம் உள்ளிட்டவைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள லேசான சரிவு, சர்க்கரை மற்றும் மக்காச்சோளத்தின் விலைகளின் ஏற்றத்தை ஈடுகட்டுவதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் உணவு முகமையின் கூற்றுப்படி, உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கண்காணிக்கும் விலைக் குறியீடு, ஆகஸ்ட் மாதத்திற்கான திருத்தப்பட்ட 121.6 புள்ளிகளுக்கு எதிராக செப்டம்பரில் சராசரியாக 121.5 புள்ளிகளாக இருந்தது எனவும்,
இது முன்பு 121.4 புள்ளிகளாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், ரஷ்யா தரப்பில் வலுவான விநியோகம் மற்றும் அதிக உற்பத்தியை உருவாக்கியதால் சர்வதேச கோதுமை விலையில் 1.6 சதவீதம் அளவுக்கு சரிவடைந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
மட்டுமின்றி, அரிசியின் விலை ஆகஸ்ட் மாதத்தில் ஏறக்குறைய 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்தில் சர்க்கரை விலை சுமார் 9.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், ஆகஸ்டு மாத விலைகளை ஒப்பிடுகையில், இந்த உயர்வானது நவம்பர் 2010க்கு பின்னர் முதல் முறை என்றே கூறப்படுகிறது.
மேலும், இந்தியா மற்றும் தாய்லாந்தில் உற்பத்தியை பாதித்த எல் நினோ வானிலை மாறுதல்களே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என கூறுகின்றனர். மட்டுமின்றி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் உலக சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என ஆய்வாளர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |