வெளியேறுகிறேன்... பிரித்தானிய காதலரால் கைவிடப்பட்ட உக்ரேனிய அகதி எடுத்த கண்ணீர் முடிவு
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான டோனி பின்னர் சோஃபியாவுடன் தனியாக குடியிருக்க முடிவு செய்தார்
அந்த உறவு முடிவுக்கு வந்துள்ளதால், அவள் நாடு திரும்புவதே உரிய முடிவு என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய காதலரால் கைவிடப்பட்ட நிலையில், தாம் உக்ரேனுக்கே திரும்ப இருப்பதாக அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் தமது குடும்பத்தை கைவிட்டு, உக்ரேனிய அகதியான 22 வயது Sofiia Karkadym என்பவருடன் தனிக்குடித்தனம் சென்றார்.
@dailymail
இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக குறித்த உக்ரேனிய இளம்பெண்ணை தற்போது டோனி கார்னெட் கைவிட்டுள்ளார். இருவரும் இனி ஒன்றாக இணைய வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துகொண்ட சோஃபியா, சொந்த நாட்டுக்கே திரும்ப இருப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் கலாட்டாவில் ஏற்பட்ட சோஃபியாவை பொலிசார் கைது செய்திருந்த நிலையில், தம்மால் இனி அவருடன் வாழ்வது கடினம் என கூறி டோனி கார்னெட் அவருடனான உறவை முறித்துக் கொண்டார்.
@mailonline
இந்த நிலையில், முதன் முறையாக இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதன் பின்னரே, சோஃபியா உக்ரேன் திரும்ப முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரேனில் இருந்து அகதியாக சோஃபியா பிரித்தானியாவில் டோனியின் குடியிருப்பில் தங்க வந்த 10 நாட்களில் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான டோனி பின்னர் சோஃபியாவுடன் தனியாக குடியிருக்க முடிவு செய்தார். இவர்களின் இந்த உறவு நான்கு மாதங்கள் மட்டுமே நீடித்துள்ளது.
@dailymail
தற்போது சோஃபியாவின் தாயார் தெரிவிக்கையில், முதலில் இவர்களின் இந்த உறவில் தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும், ஆனால் டோனியை அவள் மிகவும் விரும்புவதாகவும், இந்த உறவு உணமையானது என அவள் நம்புவதாகவும் தெரிவித்த பின்னரே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது அந்த உறவு முடிவுக்கு வந்துள்ளதால், அவள் நாடு திரும்புவதே உரிய முடிவு என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இரண்டு முறை பொலிசாரால் கைதாகியுள்ள சோஃபியா, இனி மேலும் முன்னாள் காதலரை தொடர்புகொள்ள அனுமதியும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.