தங்கம் வென்றதாக நம்பிய ஒலிம்பிக் வீராங்கனை... உண்மை தெரிந்ததும் கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம்
பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் போட்டியிட்ட நெதர்லாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் தங்கம் வென்றுவிட்டதாக எண்ணி உற்சாகத்தில் திளைத்த நிலையில், ஏற்கனவே ஒருவர் தன்னை முந்திவிட்டது தெரியவரவே, அவர் கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் ஒன்று ஒலிம்பிக்கில் நடந்தது.
நெதர்லாந்து நாட்டவரான Annemiek van Vleuten, சைக்கிள் பந்தயத்தில் முடிவு கோட்டை தொட்டதும், தான் தங்கம் வென்றுவிட்டதாக எண்ணி, முஷ்டியை உயர்த்தி ஆர்ப்பரித்து உற்சாகத்தில் திளைத்துள்ளார்.
ஆனால், அவருக்கு ஒரு நிமிடம் 15 விநாடிகளுக்கு முன்னரே, ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த Anna Kiesenhofer தங்கம் வென்றுவிட்டது அவருக்குத் தெரியாது.
அதாவது, சைக்கிள் பந்தயங்களின்போது வீரர் வீராங்கனைகள் தாங்கள் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் ரேடியோ தகவல் தொடர்பு வசதிகள் இல்லை. அதனால்தான் இந்த குழப்பம்.
இதனிடையே, Annemiek தவறாக வெற்றியைக் கொண்டாடியதை மாபெரும் தவறு என நெதர்லாந்து ஊடகங்கள் விமர்சிக்க, கண்ணீர் விட்டுக் கதறிவிட்டார் அவர்.
இதில் இன்னொரு விடயம் என்னெவென்றால், Annemiekஇன் சக வீராங்கனையான Anna van der Breggen என்பவரும், தான் தங்கம் வென்றதாக தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்.
அதேபோல், தங்கம் வென்ற Anna Kiesenhoferக்கும் தான் தங்கம் வென்றது உறுதியாக தெரியாது. நான் வெற்றிபெற்றுவிட்டேனா என தன்னைத்தான் கேட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்திருக்கிறார் அவர். நெதர்லாந்தின் Annemiek van Vleutenக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.