தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்... மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்...!
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
தஜிகிஸ்தான், துஷான்பேவில் இன்று அதிகாலை 01:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டராக பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். தற்போது வரை இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ இன்னும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன, நிலச்சரிவுகள் ஏற்பட்டன, மக்கள் நேற்று மாலை தெருக்களுக்கு ஓடினார்கள். பாகிஸ்தானில் நிலநடுக்கத்தில் 9 பேரும், ஆப்கானிஸ்தானில் 4 பேரும் உயிரிழந்தனர்.
Earthquake of Magnitude:5.8, Occurred on 23-03-2023, 01:37:46 IST, Lat: 39.15 & Long: 69.93, Depth: 10 Km ,Location: Tajikistan for more information Download the BhooKamp App https://t.co/OMUQ7g5ypK @Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @DDNewslive pic.twitter.com/OP3PdWPmfO
— National Center for Seismology (@NCS_Earthquake) March 22, 2023
An earthquake with a magnitude of 5.8 on the Richter Scale hit Nepal at 2:28 pm today: National Center for Seismology (NCS) pic.twitter.com/bAyESuuQFJ
— ANI (@ANI) January 24, 2023