அதிகாலையில் மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கம் - அச்சத்தில் அலறியடித்து ஓடிய மக்கள்
இன்று காலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்பை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்கு பகுதியில் ஒகசவாரா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது மூன்று முறை ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானை பொறுத்தளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவதும் சுனாமி ஏற்படுவதும் பொதுவானதாகும். அதை தாங்கும் வகையில் தான் அங்கு வீடுகளும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தால் வெளியே ஓடியுள்ளனர்.
மேற்கு ஒகசவாரா தீவுகளில் இருந்து சுமார் 530 கி.மீ., ஆழத்தில், 27.1 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 139 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது சக்தி வாயந்த நிலநடுக்கமாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கையும் உயிர் சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |