அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அலறிய மக்கள்
அமெரிக்காவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆண்ட்ரியானோஃப் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து அந்நாட்டு தேசிய மைய வெளியிட்ட தகவலில்,
இன்று காலை 08:36 மணிக்கு ஆண்ட்ரியானோஃப் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 105 கிமீ ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:6.5, Occurred on 03-04-2023, 08:36:58 IST, Lat: 52.92 & Long: 158.44, Depth: 105 Km ,Location: 1684km WNW of andreanof islands,Alaska for more information Download the BhooKamp App https://t.co/0LXMO4RBK3@Indiametdept @ndmaindia @Ravi_MoES @Dr_Mishra1966 pic.twitter.com/sRJN8ludBY
— National Center for Seismology (@NCS_Earthquake) April 3, 2023