பாறைகள் விழுவதாக நினைத்தேன்! ரஷ்ய பிராந்தியத்தை குலுக்கிய நிலநடுக்கம்..பதறிய குடியிருப்பாளர்கள்
ரஷ்யாவின் கிராஸ்னோடர் பிராந்தியத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பீதியை கிளப்பியது.
கிராஸ்னோடர்
தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் பிராந்தியத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் விளைவாக கருங்கடல் கடற்கரையில் உள்ள நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி இயற்பியல் ஆய்வின்படி, அதிகாலை 2.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் மையப்பகுதி 20 கிலோமீற்றர் உள்நாட்டிலும், ரிசார்ட் நகரமான அனபாவின் வடகிழக்கிலும் அமைந்துள்ளது.
பாறைகள் விழுகின்றன
ஆனால் இங்கு உள்ளூர் அதிகாரிகள் நிலநடுக்கத்தின் விளைவாக எந்த சேதத்தையும் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் கருங்கடல் கடற்கரை நகரங்களில் உள்ள மக்கள் பலத்த சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர்.
குடியிருப்பாளர் ஒருவர், "அது (நிலநடுக்கம்) மிகவும் வலுவாக நடுங்கியது. மலைகளில் கர்ஜனை போல் சத்தம் இருந்தது. பாறைகள் விழுகின்றன என்று நான் நினைத்தேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |