பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலாவில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்
வலுவான இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட 1000 பேர்கள் மரணமடைந்துள்ள வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
80க்கும் மேற்பட்டோர்
வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.9 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கராகஸ் மற்றும் மராகே பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பதிப்புகள் தொடர்பில் உடனடித் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கத்தில் 80க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த மூன்று வாரங்களுக்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 7.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மின்டானோ தீவின் ஜோஸ் அபாத் சாண்டோஸ் நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தென்மேற்கே உள்ள கடற்பரப்பில், 52.4 கிலோமீட்டர் (33 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜூன் 8 அன்று மின்டானோவைத் தாக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அந்தத் தெற்குத் தீவில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியது, நிலச்சரிவுகளைத் தூண்டியது மற்றும் ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்ததுடன், அப்பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம், கடற்கரையின் ஒரு நீண்ட பகுதியில் கடலடியை இரண்டு மீற்றர் (6.6 அடி) மேல்நோக்கித் தள்ளியது. இதனால், முன்னர் நீரில் மூழ்கியிருந்த பவளப்பாறைகள் நீருக்கு மேலே வந்தன.
ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர்
மேலும், கடலோர உயர்வு எனப்படும் ஒரு புவியியல் நிகழ்வில், கடற்கரை எல்லை 200 மீற்றர் வரை விரிவடைந்தது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, 6.5 ரிக்டர் அளவு நில அதிர்வு உட்பட, தொடர்ச்சியான வலுவான நில அதிர்வுகள் அப்பகுதியை உலுக்கின.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஜூன் 8 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 81 பேர் மரணமடைந்தனர் மற்றும் 1,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெனிசுலாவில் புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரத்தை எட்டியுள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 3360 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதிய வேளையில் மீண்டும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; 4.9 என்ற அளவில் பதிவான இந்தச் சற்று குறைவான தீவிரத்தன்மை கொண்ட நிலநடுக்கம், தலைநகர் கராகஸ் மற்றும் அருகிலுள்ள மராகேய் ஆகிய இடங்களில் உணரப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |