துருக்கி - சிரியாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... குடும்பத்தில் 25 பேர்களை பறிகொடுத்த அகதி
துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் சிரியா அகதி ஒருவர் தமது குடும்ப உறுப்பினர்கள் 25 பேர்களை பறிகொடுத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்த குடும்பத்தையும்
போருக்கு அஞ்சி அடைக்கலம் தேடி சென்ற இடத்தில், தற்போது நிலநடுக்கம் மொத்த குடும்பத்தையும் பறித்துச் சென்றுள்ளது. அஹ்மத் இத்ரீஸ் என்ற சிரியா நாட்டவர் உள்நாட்டு போருக்கு அஞ்சி குடும்பத்துடன் சிரியாவின் Saraqib பகுதியில் குடியேறியுள்ளார்.
@reuters
ஆனால் விதி தங்களை அங்கே துரத்தி வந்ததாக கூறும் இத்ரீஸ், சொந்த மகள், பேரப்பிள்ளைகள் உட்பட மொத்த குடும்பத்தையும் நிலநடுக்கத்திற்கு பறிகொடுத்துள்ளார்.
தமது பேரப்பிள்ளையின் சடலத்தை கையில் ஏந்திய இத்ரீஸ், இப்படியான ஒரு சூழலை கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றார். மகள், பேரப்பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 25 பேர்கள் பலியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு போருக்கு அஞ்சி 2012ல் சிரியாவின் Saraqib பகுதியில் குடியேறியுள்ளது இத்ரீஸ் குடும்பம். இதன் பின்னர் 2020ல் சிரியா ராணுவம் Saraqib பகுதியை மீண்டும் கைப்பற்றியது.
@getty
எங்களைப் பின்தொடரும் அநீதி
போருக்கு அஞ்சி நாங்கள் குடியிருப்புகளை விட்டு ஓடிவிட்டோம். எங்களைப் பின்தொடரும் அநீதியைப் பாருங்கள் என இத்ரீஸ் கதறியுள்ளார்.
திங்களன்று உள்ளூர் நேரப்படி விடிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, துருக்கியில் இதுவரை 9,057 பேர்களும் சிரியாவில் 2,662 பேர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை 20,000 தொடலாம் என்றே அஞ்சப்படுகிறது.