அந்தமான் நிகோபரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள்! தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள தகவல்
இன்று காலை 6.27 மணியளவில் அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேர் நகரில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது .
நிலநடுக்கம் குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இன்று காலை 7.21, 9.12 மற்றும் 9.13 மணியளவில் அடுத்தடுத்து முறையே ரிக்டரில் 4.6, 6.1 மற்றும் 5.9 அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன என்று தெரிவித்து உள்ளது.
மேலும் இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.